அதிராம்பட்டினம், டிச.04
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் (World Disability Day) புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து ஆற்றிய உரையில், மாற்றுத்திறன் படைத்தவா்களுடன் இயல்பாக பழக வேண்டும். அவா்களின் செயல்பாடுகளைப் பாராட்டி தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். நட்புடன் பழகி அவா்கள் குறையற்ற தனித்திறன் படைத்தவா்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும்' என்றார்.
கல்லூரிப் பேராசிரியை இ.பிலோமினா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக, தஞ்சை ராஜா சரபோஜி அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியர் எல்.ராஜேஷ் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சியினை, பேராசிரியர் முகமது ஹாலித் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் டி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
விழாவில், கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன், பேராசிரியர்கள் எஸ்,கணபதி, டி.லெனின் உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் (World Disability Day) புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து ஆற்றிய உரையில், மாற்றுத்திறன் படைத்தவா்களுடன் இயல்பாக பழக வேண்டும். அவா்களின் செயல்பாடுகளைப் பாராட்டி தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். நட்புடன் பழகி அவா்கள் குறையற்ற தனித்திறன் படைத்தவா்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும்' என்றார்.
கல்லூரிப் பேராசிரியை இ.பிலோமினா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக, தஞ்சை ராஜா சரபோஜி அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியர் எல்.ராஜேஷ் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சியினை, பேராசிரியர் முகமது ஹாலித் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் டி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
விழாவில், கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன், பேராசிரியர்கள் எஸ்,கணபதி, டி.லெனின் உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.