அதிராம்பட்டினம், டிச.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மின்வாரிய ஊழியர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின்சாரம் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை மேற்கொண்டு வரும் சேகரை, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், சேகரின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார். சேகர் பூரணநலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் தாம் பிரார்திப்பதாக தெரிவித்தார். அப்போது ஒப்பந்ததாரர் எம்.வீரையன், சமூக ஆர்வலர் ஆர். தவமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மின்வாரிய ஊழியர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின்சாரம் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை மேற்கொண்டு வரும் சேகரை, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.