அதிராம்பட்டினம், டிச.06
எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அநீதியை நிறுத்து, பாபரி மஸ்ஜித்தை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியினரை போலீசார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஒளரங்கசீப் தலைமை வகித்தார். அக்கட்சியினர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம். முகமது ரஹீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேக் ஜலால், எஸ்.டி.டியூ மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சி.வி நட்ராஜ், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் பி. ஷாபிர் அகமது, எஸ்.எம் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின், மாநில பேச்சாளர் வழக்குரைஞர் ஆவூர் அன்சாரி கண்டன முழக்கமிட்டார்.
முன்னதாக, அக்கட்சியினர் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். இதில், அநீதியை நிறுத்து, பாபரி மஸ்ஜித்தை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துனைத்ட் தலைவர் யூ.அப்துல் ரஹ்மான், எஸ்.டி.டியூ மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எஸ். அகமது அஸ்லம் உள்ளிட்ட அக்கட்சியினர் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், 95 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அநீதியை நிறுத்து, பாபரி மஸ்ஜித்தை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியினரை போலீசார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஒளரங்கசீப் தலைமை வகித்தார். அக்கட்சியினர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம். முகமது ரஹீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேக் ஜலால், எஸ்.டி.டியூ மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சி.வி நட்ராஜ், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் பி. ஷாபிர் அகமது, எஸ்.எம் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின், மாநில பேச்சாளர் வழக்குரைஞர் ஆவூர் அன்சாரி கண்டன முழக்கமிட்டார்.
முன்னதாக, அக்கட்சியினர் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். இதில், அநீதியை நிறுத்து, பாபரி மஸ்ஜித்தை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துனைத்ட் தலைவர் யூ.அப்துல் ரஹ்மான், எஸ்.டி.டியூ மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எஸ். அகமது அஸ்லம் உள்ளிட்ட அக்கட்சியினர் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், 95 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.