.

Pages

Monday, December 2, 2019

அதிராம்பட்டினத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், டிச.02
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அரசு  மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில், டாக்டர் எஸ்.இர்ஷத் நஸ்ரின் உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர்.

நிகழ்ச்சியையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் ஜெயபாரதி ஆகியோர் கலந்துகொண்டு, எய்ட்ஸ் குறித்து அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.