அதிராம்பட்டினம், டிச.22
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், அதிரை தீன் மெடிகல்ஸ் - லேப் மற்றும் புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மகளிருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் டி. முகமது நவாஸ்கான் தொடங்கி வைத்துப் பேசினார். செயலாளர் எஸ்.சாகுல் ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எம் தில்லை மலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, 149 149 பெண்களுக்கு குழந்தைப்பேறு, கர்ப்பப்பை கோளாறு, கருக்குழாய் அடைப்பு, ஹார்மோன் குறைபாடு ஆகியவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். இதில், 30 பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
முகாமில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எம்.கே முகமது சம்சுதீன், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் எம்.வெங்கடேசன், உறுப்பினர்கள், எம். மன்சூர், நூருல் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், அதிரை தீன் மெடிகல்ஸ் - லேப் மற்றும் புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மகளிருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் டி. முகமது நவாஸ்கான் தொடங்கி வைத்துப் பேசினார். செயலாளர் எஸ்.சாகுல் ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எம் தில்லை மலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, 149 149 பெண்களுக்கு குழந்தைப்பேறு, கர்ப்பப்பை கோளாறு, கருக்குழாய் அடைப்பு, ஹார்மோன் குறைபாடு ஆகியவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். இதில், 30 பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
முகாமில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எம்.கே முகமது சம்சுதீன், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் எம்.வெங்கடேசன், உறுப்பினர்கள், எம். மன்சூர், நூருல் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.