.

Pages

Saturday, December 28, 2019

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.28
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், குளிரில் வாடும் ஆதரவற்ற 90 பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு போர்வைகள் வழங்கப்பட்டன.

தற்போது பனிகாலமாக இருப்பதால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம், வழிபாட்டுத்தலங்கள், கடைவீதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், யாசகம் பெற்று வாழும் ஏழைகள் குளிரில் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், ஆதரவற்ற 90 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க  தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை சங்கத்தின், கலாம்-20 முதுமையை மதிக்கலாம் பிரிவின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், லயன்ஸ்  மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், சங்க நிர்வாகிகள் என்.ஆறுமுகச்சாமி, எம். முகமது அபூபக்கர், முல்லை ஆர். மதி, வரிசை முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.