.

Pages

Thursday, December 12, 2019

மானா மீயென்னச் சேனாவின் பூவொன்று உதிர்ந்தது...★

தெருவை ஆண்டாய்த் திறந்த மனத்தில்
உருவில் அழகு உயர்ந்தாய் அன்பில்
சிரியோர் பொரியோர் சிரிதோ எதிலும்
பரிவு வார்த்தை பகர்ந்தாய்ப் பண்பே !

எவரின் மனமும் எங்கனும் கோனாத்
தவறு கண்டும் தவிர்க்கப் பேசும்
சினத்தைக் கூடச் சிரிப்பில் வடிக்கும்
உனது வழியும் உயர்வு தானே !

மகானின் உன்னத மான்பை அறிந்தே
மகானின் பெயரை மதித்து வைத்தார்
மங்காப் பெயர்ஷேக் நஸ்ருத் தீனாம்
உங்கள் பெற்றோர் உணர்ந்தும் தானே

இருக்கும் வரைக்கும் இஸ்லாம் வழியில்
மறுப்புத் தோன்றா மரபைக் காத்தாய்
வெறுப்பு வேற்றுமை விதையைக் களைந்தே
வென்றாய் மன்றம் விரும்பும் மனிதம் !

அனைத்து மஹல்லா ஜமாத்து தலமை
அழைப்புத் தந்தார் அலங்கரித் தாய்நீ
உழைத்தே உழைத்தே ஓய்வுப் பெறவா...
உலகைத் துறந்தாய் உறவை விட்டே !

அங்கி ருந்து வந்தோம் மீண்டும்
அங்கு செல்வது அவனின் வழியாம்
இங்கி ருக்கும் இகத்தில் இவரும்
தங்கமாய் மின்னினார் தருக சுவர்க்கமே !

இறைவா இறைஞ்சும் எங்கள் உரிமை
மறையை மதித்த மனிதர் இவரை
அகிலம் போற்றும் நாதர் அருகில்
மகிழ்வில் நிலைக்க அருள்வாய் அங்கே !

ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.