.

Pages

Tuesday, December 10, 2019

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமைகள் தின விழா!

அதிராம்பட்டினம், டிச.10
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அசரப் அலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானிப் பிரிவு மருத்துவர் சி.ஷெரீன், மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்று, மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றி விளக்கிப் பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி எம்.அமீர் காசிம் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.