.

Pages

Monday, December 2, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் உலக கணினி எழுத்தறிவு தினம் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.02
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி கணினித் துறை சார்பில், உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day) இன்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக, புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் பேராசிரியர் ஆர்.மணிமாறன் கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால நிலைகள் மற்றும் பயன்கள் பற்றி பேசினார். கல்லூரி பொருளாதாரத் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ் கணபதி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், கல்லூரிப் பேராசிரியர் ஜெ.சொக்கலிங்கம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை, பேராசிரியர் ஏ.ஹாஜா அப்துல் காதர் தொகுத்தளித்தார். நிறைவில் பேராசிரியை ஏ.சித்தி ஜாபிரா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பேராசிரியர்கள் பி.ஸ்ரீநிவாசன், எம்.திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.