மதுக்கூர், டிச.10
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரி நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 45 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் இன்று (டிச.10) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் எம்.முகமது ரஹீஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.அபுபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகலை எரிக்க முயன்ற அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஒளரங்சீப், மதுக்கூர் பேரூர் தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 45 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரி நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 45 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் இன்று (டிச.10) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் எம்.முகமது ரஹீஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.அபுபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகலை எரிக்க முயன்ற அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஒளரங்சீப், மதுக்கூர் பேரூர் தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 45 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.