.

Pages

Sunday, December 8, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.08
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல்துறை சார்பில், 'மீன்பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். 

சிறப்பு விருந்தினராக கடல் அறிவியல் ஆசிரியர் மாலத்தீவு ஏ ஷாஜகான் கலந்துகொண்டு, 'படகு மற்றும் வலை மூலம் கடலில் மீன் பிடிக்கும் தொழில் நுட்பம் குறித்தும், மீன்கள் அதிகளவில் தென்படும் பகுதியை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றியும் விளக்கிப் பேசினார்.

முன்னதாக, கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத்  வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் ஓ. சாதிக் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் எம் முகமது முகைதீன், பேராசிரியர் எஸ்.ரவீந்தரன் மற்றும் பேராசிரியர்கள் வி. கானப்பிரியா, என்.வசந்தி, மல்கர் ஒலி, கல்லூரி முன்னாள் மாணவர்கள் டி.சந்திரபோஸ், ஏ.அண்ணாதுரை, ஜி.முருகன், ஜி.ராமச்சந்திரன், ஆனந்த், டி.ரவிச்சந்திரன், எம்.மணிமாறன், ஏ.தணிகாசலம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.