அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அவற்றை, தனது சொந்த நிதியில் இருந்து பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் வழங்கினார். முன்னதாக, கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாகப் களப்பணியாற்றிய சுகாதரத்துறையினர், செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோரின் பணியைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர் கே.சிவக்குமார், சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்பார்ந்த சகோதரர்களே உங்கள் பணிக்கு நன்றி உண்டாகட்டும். இன்று ஒன்று கூடிய நண்பர்கள் சென்ற மாதம் இந்த ஊருக்கு வரவேண்டாம் அந்த ஊருக்கு போகவேண்டாம் என்று ஒரு சில நண்பர்கள் தடுத்தார்கள்லே அப்போ எங்கே போனார்கள் இந்த கரை வேஷ்டிகாரர்கள்.வரும் காலம் பதில் சொல்லும்
ReplyDelete