.

Pages

Tuesday, May 19, 2020

எம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில் 100 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.19
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அவற்றை, தனது சொந்த நிதியில் இருந்து பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் வழங்கினார். முன்னதாக, கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாகப் களப்பணியாற்றிய சுகாதரத்துறையினர், செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோரின் பணியைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர் கே.சிவக்குமார், சேதுராமன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. அன்பார்ந்த சகோதரர்களே உங்கள் பணிக்கு நன்றி உண்டாகட்டும். இன்று ஒன்று கூடிய நண்பர்கள் சென்ற மாதம் இந்த ஊருக்கு வரவேண்டாம் அந்த ஊருக்கு போகவேண்டாம் என்று ஒரு சில நண்பர்கள் தடுத்தார்கள்லே அப்போ எங்கே போனார்கள் இந்த கரை வேஷ்டிகாரர்கள்.வரும் காலம் பதில் சொல்லும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.