![]() |
அதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை புனரமைக்கும் பணிகள் ஆய்வின் போது |
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வடகாடு வாய்க்கால் 7 கிமீ நீள அளவில் தூர்வாரும் பணி, பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் மஞ்சக்குடி ஏரி தூர்வாரும் பணி ஆகிய பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வருவதற்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் இருபுறமும் கரைகளை பலப்படுத்தி, சமன்படுத்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.