.

Pages

Monday, May 11, 2020

அதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!

அதிராம்பட்டினத்தில் பூட்டிக்கிடக்கும் முடி திருத்தும் கடைகள்
அதிராம்பட்டினம், மே.11
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, வீட்டில் முடங்கிக் கிடக்கும் முடி திருத்தும் தொழிலாளிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அதிராம்பட்டினம் முடி திருத்துனர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் முடிதிருத்துனர் நலச்சங்கத் தலைவர் செல்லத்துரை கூறியது;
அரசின் ஊரடங்கு உத்தரவால், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடி திருத்துனர் கடைகள் திறக்க அனுமதிக்கப்படாததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால், அதிராம்பட்டினத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் சுமார் 100 க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளிகள் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை வாடகை, மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அரசு சார்பில், மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் குடும்ப நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.