.

Pages

Friday, May 15, 2020

கரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்!

அதிரை நியூஸ்: மே.15
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 55 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 70 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 53 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலதிருப்பூந்துருத்தி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு சமத்துவபுரத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் குணமடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் குமுதா லிங்கராஜ், முதல்வர் (பொ) சு.மருதுதுரை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்டோர் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினை வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும், குணமடைந்து வீடு செல்லும் நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.