.

Pages

Friday, May 29, 2020

108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்!

அதிரை நியூஸ்: மே 29
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உதவிப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (29.05.2020) வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் இருபத்து நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் இரண்டு ஷிப்ட்களாக பணியாற்றி வரும் 116 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என  ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான உதவிப் பொருட்களை அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். கொரோனா தடுப்புப்பணியில் முன்களத்திலிருந்து பணியாற்றிவரும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி கௌரவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. முத்து மீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.