.

Pages

Saturday, May 9, 2020

நடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங்களுக்கு தேடிச்சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்!

அதிராம்பட்டினம், மே.09
அதிராம்பட்டினம் நடுத்தெரு ~ வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங்களுக்கு வீடு தேடிச்சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய பள்ளி ஆசிரியர்களின் மனிதநேய செயலுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ~ வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில், பள்ளியில் கல்வி பயிலும் பிலால் நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளின் ஏழை மாணவர்கள் 50 பேரின் குடும்பங்களுக்கு, ரூ 400 மதிப்பிலான மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை, தலைமை ஆசிரியர் எஸ்.மாலதி தலைமையிலான, பள்ளி ஆசிரியர்கள் வீடு தேடிச் சென்று வழங்கினர்.  நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களின் மனிதநேய செயலைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.