.

Pages

Monday, May 18, 2020

அதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் 150 குடும்பங்களுக்கு வழங்கல்!

அதிராம்பட்டினம், மே.18
அதிரை மேம்பாட்டுச் சங்கமம் சார்பில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழைத் தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான, ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகைப் பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டன. பயனாளிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட மளிகைக்கடையில் டோக்கனை கொடுத்து மளிகைப்பொருட்களை இலவசமாக பெற்றுச்சென்றனர்.

மேலும், தேவையுடைய பயனாளிகள் அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு உதவ எண்ணுவோர் கீழ்காணும் அலைப்பேசி எண்ணில் அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் நிர்வாகிகளைத் நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவலாம்.

எல்.எம்.எஸ் முகமது யூசுப் (9940 851581) 
ஜெ.எம் சம்சுதீன் (97890 55567)
ஏ.ஜெ அஸ்ரப் அலி (98402 07778)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.