.

Pages

Sunday, May 10, 2020

அதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது?

அதிரை நியூஸ்: மே.09
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்களுக்கு புதிதாக எந்தவொரு நோய்த்தொற்றும் கண்டறியப்படாவிட்டால், அப்பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கான நிபந்தனைகளிலிருந்து தளர்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், கரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடனான (09.05.2020) அன்று நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் அதிராம்பட்டினம், திருவையாறு பேரூராட்சி, பாபநாசம் பேரூராட்சி, கும்பகோணம் நகராட்சி, ஒரத்தநாடு நெய்வாசல் ஊராட்சி, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.எம்.எஸ் நகர், வல்லம் பேரூராட்சி, முடச்சிக்காடு, பாபநாசம் திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று உள்ளோரின் வீட்டிலிருந்து அதை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் மற்றும் மேலும் 2 கிலோ மீட்டர் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஏப்.19 ந் தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், வரும் வாரத்திற்குள் 28 நாட்கள் கால அவகாசம் நிறைவடைய உள்ளது. இதனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து அதிராம்பட்டினம் பகுதி முழுமையாக தளர்வு ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது.

எனவே, அரசின் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துதல் ஆகியவற்றில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.