.

Pages

Tuesday, May 26, 2020

இலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் (வீடியோ, படங்கள்)

அதிராம்பட்டினம், மே 26
விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சி அறிவுறுத்திருந்தது.

அதன் படி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே. தமீம் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர் நாராயண சாமி, பொருளாளர் ஜி.திலகராஜ் கட்டபொம்பன் உள்ளிட்ட 4 பேர் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக, கையில் கருப்பு கொடி ஏந்தி, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 2 நிமிடத்திலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.