.

Pages

Tuesday, May 19, 2020

அதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.19 

அதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. 

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மற்றும் அலுவலர்கள், முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், கர்சீப் கட்டி வந்தவர்கள், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் சென்றவர்கள் என பலருக்கும், 50 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து, பேரூராட்சி அலுவலக தரப்பில் தெரிவித்தது;
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு நடவடிக்கைகளை பேரூராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, அபராதம் விதித்து அவர்களுக்கு முகக் கவசத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்று மட்டும், 23 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். என இவ்வாறு தெரிவித்தனர்.
 

1 comment:

  1. தமிழகத்தில் இல்லாத சட்டமாக இருக்கின்றதே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.