பேராவூரணி மே.10-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடைபெற்று வருவதை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்மையில், தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு மண்டல அலுவலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.எஸ்.சண்முகம், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடத்தி கொரோனா உள்ளதா எனக் கண்டறிய உத்தரவிட்டார்.
அதன் முடிவுகளின் அடிப்படையில் நோய்த்தொற்று உள்ள கர்ப்பிணிகளை தனிமைப்படுத்தி, தஞ்சையிலும், பாதிப்பில்லாதவர்களை அந்தந்தப் பகுதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவத்திற்காக அனுமதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
அதனடிப்படையில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல், அழகியநாயகிபுரம், பெருமகளூர், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு வார காலத்திற்குள் பிரசவிக்க உள்ள 24 தாய்மார்களுக்கு, முதல்கட்டமாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டது.
பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன், சளி மாதிரி எடுக்கப்பட்டு வருவதை, ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் துரை.நீலகண்டன் நன்கொடையாக வழங்கிய தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் ஆகியவற்றையும் கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.
அரசு மருத்துவமனை டாக்டர் ஹம்சவாணி தலைமையில், ஆய்வக நுட்பநர்கள் கார்த்திகா, குமரேசன், பாண்டியன் ஆகியோர் சளி மாதிரியை ஆய்வுக்காக எடுத்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மஸ்தூர் மீனாட்சி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடைபெற்று வருவதை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்மையில், தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு மண்டல அலுவலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.எஸ்.சண்முகம், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடத்தி கொரோனா உள்ளதா எனக் கண்டறிய உத்தரவிட்டார்.
அதன் முடிவுகளின் அடிப்படையில் நோய்த்தொற்று உள்ள கர்ப்பிணிகளை தனிமைப்படுத்தி, தஞ்சையிலும், பாதிப்பில்லாதவர்களை அந்தந்தப் பகுதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவத்திற்காக அனுமதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
அதனடிப்படையில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல், அழகியநாயகிபுரம், பெருமகளூர், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு வார காலத்திற்குள் பிரசவிக்க உள்ள 24 தாய்மார்களுக்கு, முதல்கட்டமாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டது.
பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன், சளி மாதிரி எடுக்கப்பட்டு வருவதை, ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் துரை.நீலகண்டன் நன்கொடையாக வழங்கிய தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் ஆகியவற்றையும் கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.
அரசு மருத்துவமனை டாக்டர் ஹம்சவாணி தலைமையில், ஆய்வக நுட்பநர்கள் கார்த்திகா, குமரேசன், பாண்டியன் ஆகியோர் சளி மாதிரியை ஆய்வுக்காக எடுத்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மஸ்தூர் மீனாட்சி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.