.

Pages

Tuesday, May 19, 2020

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.19
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்துள்ள, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்காமல் முறையாக அமல்படுத்த வேண்டும். அங்காடிகளில் அனைத்து பொருட்களையும், தட்டுப்பாடின்றி முறையாக வழங்க வேண்டும். குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

அதிராம்பட்டினத்தில்...
அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ், ஏ.ஐ.ஓய், எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எம். முகமது இக்பால், மீராஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

பேராவூரணியில்...
அதனொரு பகுதியாக, பேராவூரணி ஆவணம் சாலை கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் பி.காசிநாதன், ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், ரவி, நகரச் செயலாளர் சித்திரவேல், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கருணாமூர்த்தி, விவசாய சங்க பொறுப்பாளர்கள் எம்.கே.ஆறுமுகம், பி.ஏ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.