அதிரை நியூஸ்: மே.23
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (23.05.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 16.06.2020 முதல் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஒரு அறையில் பத்து மாணவர்கள் வீதம் தேர்வு அறைகளை ஒதுக்கிட வேண்டும். தேர்வு அறைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமிநாசினி கொண்டு தினந்தோறும் சுத்தம் செய்திட வேண்டும். அரசு விடுதியிலிருந்து தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வரும் 16.06.2020 முதல் தேர்வு முடியும் வரை தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
விடுதிகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கைகழுவும் வசதி, சமூக இடைவெளி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து வசதி தேவைப்படும் மாணவர்களின் விபரங்கள் குறித்து முன்கூட்டியே கல்வித்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாக தெரிந்து கொண்டு, தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி தனியாக மையம் ஏற்படுத்தி தேர்வு எழுத வைக்க வேண்டும்.
மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 9842207910, 9786867661, 8610798553, 9443641674, 9443589120 ஆகிய எண்களிலும், 1077 எனும் எண்ணில் கட்டுப்பாட்டு அறையின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (23.05.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 16.06.2020 முதல் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஒரு அறையில் பத்து மாணவர்கள் வீதம் தேர்வு அறைகளை ஒதுக்கிட வேண்டும். தேர்வு அறைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமிநாசினி கொண்டு தினந்தோறும் சுத்தம் செய்திட வேண்டும். அரசு விடுதியிலிருந்து தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வரும் 16.06.2020 முதல் தேர்வு முடியும் வரை தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
விடுதிகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கைகழுவும் வசதி, சமூக இடைவெளி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து வசதி தேவைப்படும் மாணவர்களின் விபரங்கள் குறித்து முன்கூட்டியே கல்வித்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாக தெரிந்து கொண்டு, தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி தனியாக மையம் ஏற்படுத்தி தேர்வு எழுத வைக்க வேண்டும்.
மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 9842207910, 9786867661, 8610798553, 9443641674, 9443589120 ஆகிய எண்களிலும், 1077 எனும் எண்ணில் கட்டுப்பாட்டு அறையின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.