.

Pages

Wednesday, May 20, 2020

தஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்படும்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: மே.20
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 58.3 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடப்பாண்டிற்கான குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் முதலமைச்சர் குடிமராமத்து திட்டம் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு குடிமராமத்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

எனவே, முன்னுரிமை அடிப்படையில் முதலில் தண்ணீர் வரும் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 35.38 கோடி மதிப்பீட்டில் 109 பணிகளும், தூர்வாரும் பணிகளின் கீழ் ரூபாய் 22.92 கோடி மதிப்பீட்டில் 944.97 கிலோமீட்டர் நீள தூரத்திற்கு 165 பணிகளும் நடைபெறவுள்ளது.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 5309.949 கிலோமீட்டர் நீள அளவிலான 1325 வாய்க்கால் பணிகள் ரூபாய் 64.86 கோடி மதிப்பீட்டிலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 298.8 கிலோமீட்டர் நீள அளவிலான 231 வாய்க்கால் பணிகள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டிலும் தூர்வாரப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மொத்தம் ரூபாய் 128.16 கோடி  மதிப்பீட்டில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 608 குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்படவுள்ளது. நீர்நிலைகளை தூர்வாரும்போது வரத்து வாய்க்கால்கள் மற்றும் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்களையும் முறையாக தூர்வாரிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டாமல் இருப்பதை தீவிரமாக கண்காணித்து, நீர்நிலைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.