.

Pages

Monday, May 25, 2020

பெருநாள் பேரின்பம்!

      ★பெருநாள் பேரின்பம்★
  (முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

நாளின் றானதுகாண் 'பெருநாள்' - இன்று
நம்மைத் துறந்தவனைப் பெறவே !
சூழ்கொண் டாகநோன்பு நோற்றோம் - இனி
சுற்றும் பொழுதுகளி னின்பம் !

'நானே கூலியாவே' னென்றான் ! ,- அவன்
நம்மிற் தனைக்காண மோகம் !
வீணே யவன்சொல்லான் நம்பு - நீ
வெற்றிக் கொண்டாற்பே ரின்பம் !

பிறவிப் பலனெனக் கொண்டால் - இது
பெறுவ தற்குத்தான் வாழ்வு
உறவு வேறில்லைக் கண்டால் - ஒன்றின்
உருவிற் பலதான வின்பம் !

அரூபன் விளையாட்டி லுருவம் - பல
அவனின் மாட்சிமையிற் கோலம்
சொரூபம் உருவாகும் போது - தன்
சுயத்திற் தோன்றுமேபே ரின்பம் !

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.