.

Pages

Wednesday, May 27, 2020

பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு QR CODE மூலம் பாஸ் வழங்கல்!

பட்டுக்கோட்டை, மே.27
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று (27.05.2020) புதன்கிழமை முதல் QR CODE மூலம் ஸ்கேன் செய்து நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பாஸ் (PASS) வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும் முறையை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர். ராமு தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேவையற்ற ஒன்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் உறவினர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டு, மருத்துவமனையில் சமூக விலகலைக் கடைபிடிப்பது எளிதாகும்.

இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியக் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் உடனிருப்போர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.