.

Pages

Sunday, May 31, 2020

முடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ சி.வி சேகர் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 31
அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சி முடுக்குக்காடு பகுதி தனபால் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் பற்றி எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவல் அறிந்ததும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்எல்ஏ சி.வி சேகர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, துணைச் செயலாளர் எம்.ஏ முகமது தமீம், வீ.சேதுராமன், முன்னாள் கவுன்சிலர் கே.சிவக்குமார், ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.