அதிரை நியூஸ்: மே 29
வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான இ - பாஸை தவறாகப் பயன்படுத்திய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெனரால்டு என்பவர் நாகப்பட்டினத்திலிருந்து கார் மூலம் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸை சென்னையிலிருந்து திரும்பும்போது கும்பகோணத்தை சேர்ந்த நபர்களை அழைத்து வருவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இதைப்போன்று, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிளக்ஸ் நிர்மல் மற்றும் சங்கர் ஆகிய இரு நபர்கள் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட இரண்டு நபர்கள் கூடுதலாக அழைத்துச் சென்றுள்ளனர். மேற்காணும் காரணங்களுக்காக, மூன்று நபர்களும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, ஊரடங்கு காலத்தின்போது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றிட வழங்கப்படும் இ - பாஸ்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும், கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீதும், இ - பாஸில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான இ - பாஸை தவறாகப் பயன்படுத்திய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெனரால்டு என்பவர் நாகப்பட்டினத்திலிருந்து கார் மூலம் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸை சென்னையிலிருந்து திரும்பும்போது கும்பகோணத்தை சேர்ந்த நபர்களை அழைத்து வருவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இதைப்போன்று, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிளக்ஸ் நிர்மல் மற்றும் சங்கர் ஆகிய இரு நபர்கள் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட இரண்டு நபர்கள் கூடுதலாக அழைத்துச் சென்றுள்ளனர். மேற்காணும் காரணங்களுக்காக, மூன்று நபர்களும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, ஊரடங்கு காலத்தின்போது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றிட வழங்கப்படும் இ - பாஸ்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும், கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீதும், இ - பாஸில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.