.

Pages

Saturday, May 30, 2020

அமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு: தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: மே 30
அமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு. வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் பங்கேற்பு.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் வல்லெஹோ நகரில் மூடப்பட்டிருந்த இஸ்லாமிக் சென்டர் தொழுகைக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்மா சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த தலா 100 பேர் வீதம் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி, 2 மணி, 3 மணி ஆகிய 3 வேளைகளில் தனித்தனியாகத் தொழுகை நடத்தப்பட்டன. இதில், அனைவரும் முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.