.

Pages

Saturday, May 30, 2020

கரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

அதிரை நியூஸ்: மே 30
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 79 ஆக உயர்ந்ததால், தற்போது சிகிச்சையில் 9 பேர் மட்டுமே உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 88 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஏற்கெனவே 76 பேர் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சை பெற்று குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

இதன் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. இன்னும் 9 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் பழங்கள், குணமடைந்ததற்கான சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும் குணமடைந்து வீடு செல்லும் நபர்கள்; தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை:

Date No. of Cases Discharged
16.04.2020  1
21.04.2020  3
23.04.2020  3
24.04.2020  1
25.04.2020  10
27.04.2020  6
28.04.2020  9
29.04.2020  2
01.05.2020  3
03.05.2020  3
04.05.2020 2
07.05.2020 1
08.05.2020 1
09.05.2020 1
12.05.2020 1
13.05.2020 6
14.05.2020 2
15.05.2020 1
16.05.2020 6
17.05.2020 2
18.05.2020 2
22.05.2020 1
26.05.2020 2
27.05.2020 2
28.05.2020 5
30.05.2020 3
     TOTAL 79

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.