.

Pages

Saturday, May 16, 2020

அதிராம்பட்டினம்: கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழுமையாக மாறியது: பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி!

அதிராம்பட்டினம், மே 16
கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழுமையாக மாறியது அதிராம்பட்டினம். இதனால், பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து அதிராம்பட்டினத்தை முழுமையாக விடுவிக்கவும், பாதிப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை முழுமையாக அகற்றவும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 71 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வரை 62 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய 9 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த ஏப்.25 ந் தேதியும், 3 நபர்கள், ஏப்.27 ந் தேதியும், 4 நபர்கள், ஏப்.28 ந் தேதியும், 2 நபர்கள், மே.03 ந் தேதியும், ஒரு நபர், மே.04 ந் தேதியும், 2 நபர்கள், மே.13 ந் தேதியும்,  ஒரு நபர், மே.16 ந் தேதியும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த அனைவரும் வீடு திரும்பியதால் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்கள் முடிவுற்று புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால், அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அண்மையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்திருந்தார்.

அதன்படி, அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஏப்.19 ந் தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், 28 நாட்கள் காலக்கெடு நாளை (மே.17) ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து அதிராம்பட்டினம் பகுதி முழுமையாக தளர்வு ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து அதிராம்பட்டினத்தை முழுமையாக விடுவிக்கவும், பாதிப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை முழுமையாக அகற்றவும், சேர்மன் வாடி அருகில் உள்ள மத்திய வங்கி, தபால் நிலையம் ஆகியவை இயங்கவும், கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுகக்கிட்டங்கி, தரகர்தெரு ஆகிய பகுதிகளின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கவும், அதிராம்பட்டினம் தென்னை விவசாயிகள் தங்களது நிலங்களுக்குள் சென்று அன்றாட விவசாயப்பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக களப்பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் பணியைப் பாராட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.