தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் பொது முடக்கம் கிடையாது என்றார் ஆட்சியர் ம.கோவிந்தராவ்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது;
அரசு உத்தரவின்படி, பொது முடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற நாள்களில் எப்படி இருக்கிறதோ, ஞாயிற்றுக்கிழமையும் அப்படியே இருக்கும். மாவட்டத்தில் இதுவரை ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழுப் பொது முடக்கம் இனி மேல் இருக்காது. ஆனால், அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்.
பொதுமக்கள் வெளியே வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இதேபோல், முகக்கவசம் அணியவேண்டும். வேலைக்குச் செல்வர்களுக்கான அடையாள அட்டைகள் உள்ளாட்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கடையில் வேலை செய்பவர்களுக்கும் உள்ளாட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் போலீசார் சோதனை செய்வர். எனவே, அடையாள அட்டையைக் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், முகக்கவசம் அணியாவிட்டாலும் திருப்பி அனுப்பப்படுவர்.
மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளி மாவடங்களிளிருந்தும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரும்பி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் சோதனைச்சாவடிகளில் முறையாகப் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களில், அறிகுறி உள்ளவர்கள் அதிக அளவில் கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்துதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் வரும்வரை இவர்கள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். இவர்களில் யாருக்காவது கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கரோனா தொற்று இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. என்றார்.
மாஷாஅல்லாஹ்... யா அல்லாஹ் கொரோனா நோய் தொற்றுலிருந்து எங்களையும் மற்றும் அணைத்து சமுதாய மக்களையும் பாதுகாப்பாயாக... ஆமீன்..
ReplyDelete