.

Pages

Saturday, May 9, 2020

தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முடக்கம் கிடையாது!

அதிரை நியூஸ்: மே 09
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் பொது முடக்கம் கிடையாது என்றார் ஆட்சியர் ம.கோவிந்தராவ்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது;
அரசு உத்தரவின்படி, பொது முடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற நாள்களில் எப்படி இருக்கிறதோ, ஞாயிற்றுக்கிழமையும் அப்படியே இருக்கும். மாவட்டத்தில் இதுவரை ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த  முழுப் பொது முடக்கம் இனி மேல் இருக்காது. ஆனால், அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்.

பொதுமக்கள் வெளியே வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இதேபோல், முகக்கவசம் அணியவேண்டும். வேலைக்குச் செல்வர்களுக்கான அடையாள அட்டைகள் உள்ளாட்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கடையில் வேலை செய்பவர்களுக்கும் உள்ளாட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் போலீசார் சோதனை செய்வர். எனவே, அடையாள அட்டையைக் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், முகக்கவசம் அணியாவிட்டாலும் திருப்பி அனுப்பப்படுவர்.

மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளி மாவடங்களிளிருந்தும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரும்பி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் சோதனைச்சாவடிகளில் முறையாகப் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களில், அறிகுறி உள்ளவர்கள் அதிக அளவில் கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்துதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் வரும்வரை இவர்கள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். இவர்களில் யாருக்காவது கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கரோனா தொற்று இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. என்றார்.

1 comment:

  1. மாஷாஅல்லாஹ்... யா அல்லாஹ் கொரோனா நோய் தொற்றுலிருந்து எங்களையும் மற்றும் அணைத்து சமுதாய மக்களையும் பாதுகாப்பாயாக... ஆமீன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.