.

Pages

Sunday, May 31, 2020

தற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கேட்பு: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!

அதிரை நியூஸ்: மே.31
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து, கொரோனா ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாத ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாக தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கிடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் வரை, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.