.

Pages

Friday, May 22, 2020

நிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.22
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள்,  மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதையும், தொழிலாளர்கள் நலச்சட்டங்கள் திருத்தும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், துணைச்செயலாளர் எஸ்.பன்னீர் செல்வம், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ். மீராஷா, மோகன்தாஸ், அப்துல் முனாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.