.

Pages

Monday, July 27, 2020

அதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 2000 குடும்பங்களுக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்!

அதிராம்பட்டினம், ஜூலை 27
அதிரை பைத்துல்மால் மற்றும் உயிராற்றல் ஹோமியோ ரிசர்ச் & அவர்னஸ் டிரஸ்ட் சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை மருந்து பட்டியலில் பரிந்துரைத்திருந்த, 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' என்ற (90 எண்ணிக்கை அடங்கிய மருந்து குப்பி) ஹோமியோபதி மருந்து பொதுமக்களுக்கு 2 ஆம் கட்டமாக இன்று திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக கடந்த (22-07-2020) அன்று ஹோமியோபதி மருத்துவரும், ஆயுஸ் மருத்துவ அலுவலர் (ஓய்வு) டாக்டர் எம். சுலைமான்கான் கலந்துகொண்டு, மருந்து உபயோகப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்து, அதிராம்பட்டினம் பகுதியில் 2000 குடும்பங்களுக்கு மருந்து குப்பிகளை வழங்கினார்.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை 2 ஆம் கட்டமாக, அதிராம்பட்டினத்தில் விடுபட்ட 2000 குடும்பங்களுக்கு அதிரை பைத்துல்மால் மஹல்லா நிர்வாகிகள் மூலம் மருந்து குப்பிகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.