தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, தமுமுக அமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு தலைமை வகித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் வழக்குரைஞர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கலந்துகொண்டு, தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியது;
'கரோனா ஊரடங்கு காலத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக அமைப்பை சேர்ந்த களப்பணியாளர்கள் அனைத்து சமுதாயத்தினருக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர்களின் மத நெறிமுறைகள் படி அடக்கம் செய்யும் பணியை தமிழகம் முழுவதும் எவ்வித தயக்கமின்றி செய்து வருகின்றனர். இந்தப்பணி என்பது சாதாரணமானப் பணி அல்ல. உயிரைப் பணையம் வைத்து அர்பணிப்போடு செய்துவரும் பணி' என்றார்.
இதையடுத்து, கடைத்தெரு தமுமுக, மமக அலுவலகம், தக்வா பள்ளிவாசல் முக்கம் ஆகிய 2 இடங்களில் தமுமுக, மமக கொடி ஏற்றி வைத்து, கொள்கை முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வில், தமுமுக மாநில இளைஞர் அணி செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மதுக்கூர் முகமது சேக் ராவூத்தர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ.சாதிக் பாட்சா, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, செயலாளர் நியாஸ் முகமது, துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, துணைச்செயலாளர் அஸ்லம், பீர் முகமது, அதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளர் சகாபுதீன் மற்றும் தமுமுக, மமக மாவட்ட, அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.