.

Pages

Sunday, July 12, 2020

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க 2020-2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா அதிராம்பட்டினம் ராயல் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி. முகமது நவாஸ்கான் தலைமை வகித்தார். செயலாளர் எஸ். சாகுல் ஹமீது ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜி. மனோகரன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய தலைவராக எஸ். சாகுல் ஹமீது, செயலாளராக ஏ.ஜமால் முகமது,, பொருளாளராக ஜெ. அமீன் நவாஸ்கான் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சமூக இடைவெளியையுடன் கலந்துகொண்டனர். பசுமையை வலியுறுத்தி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 
 
  
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.