.

Pages

Sunday, July 12, 2020

முழு ஊரடங்கு: அதிராம்பட்டினம் பகுதி துறைமுகங்கள் வெறிச்சோடியது (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 12
முழு ஊரடங்கால் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் தினசரி அதிகாலை முதல் காலை வரை படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வழமையாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை செல்லாததால், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. துறைமுகங்களில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.