.

Pages

Friday, July 31, 2020

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி!

அதிரை நியூஸ்: ஜூலை 31
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான பயிற்சி இணைய தள வழியாக 14 வட்டாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு பயிற்சி அந்தந்த துறையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சியானது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி, பயிர் காப்பீடு முக்கியத்துவம், இயற்கை வழி வேளாண்மை, மண் மற்றும் மண்வள அட்டை மேலாண்மை, இயற்கை வழியில் காய்கறிகள் பயிரிடல், தேனீ வளர்ப்பு, மல்பரி நாற்று வளர்ப்பு, கால்நடைகளுக்கு நுண்ணூட்ட கலவை, உள்நாட்டு மீன் வளர்ப்பு, சூரிய ஒளி மின்சக்தி பயன்பாடு வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகள், தரம் வாய்ந்த விதை நெல் உற்பத்தி, ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய தலைப்புகளில் உள்மாவட்ட விவசாயிகளுக்கான பயிற்சிகள் 31.08.2020 வரை இணையதள வழியாக நடைபெறும்.

பி.கலைவாணன், மூத்த வேளாண் வல்லுநர் அவர்கள் 29.07.2020 அன்று ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். 30.07.2020 அன்று  நீடித்த நிலையான கரும்பு சாகுபடி (SSI in Sugarcane) என்ற தலைப்பில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து இணைய வழி பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டாரங்களிலிருந்து கரும்பு பயிரிடும் விவசாயிகள் காணொளி காட்சி மூலம் பயிற்சியில் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, குருங்குளம் கரும்பு அலுவலர்                  முனைவர் ஜெ.இந்திரஜித் அவர்கள் கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அ.ஜஸ்டின், வேளாண்மை இணை இயக்குநர், தஞ்சாவூர், தி.பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநர் (உபநி) மற்றும் த.கண்ணன், வேளாண்மை அலுவலர் (உபநி) ஆகியோர் கலந்து கொண்டனர். தி.பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநர் (உபநி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.