.

Pages

Friday, August 7, 2020

பேராசிரியர் கே.எம் காதர் மொய்தீன் பூரண நலம் பெற அதிரையில் சிறப்பு பிரார்த்தனை!

அதிராம்பட்டினம், ஆக.07
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, அக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் மருத்துவமனையில் உள்ள தேசியத் தலைவர் பூரண நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் கவிஞர் அ.ஷேக் அப்துல்லாஹ் தலைமையில், பொருளாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் முன்னிலையில், சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு அக்கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மவ்லவி எம். முகைதீன் அப்துல் காதர் கலந்துகொண்டு, மருத்துவமனையில் உள்ள தேசியத் தலைவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப துஆ செய்தார்.

இந்நிகழ்வில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.