.

Pages

Saturday, August 8, 2020

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் நல அவசர சிகிச்சை பிரிவு திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.08
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சுற்றுச் சுவருடன் கூடிய மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு நூற்றாண்டு நுழைவுவாயில், காத்திருப்போர் கூடம் மற்றும் அணுகுசாலை திறந்து வைத்து மற்றும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர்,வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் தலைமையில் நோய் தடுப்புப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
       
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆர்.வைத்தியலிங்கம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 50 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவருடன் கூடிய மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு நூற்றாண்டு நுழைவுவாயில், காத்திருப்போர் கூடம் மற்றும் அணுகுசாலை ஆகிய முடியுற்ற பணிகளை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர், வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் இன்று (08.08.2020) திறந்து வைத்தார்கள் மாவட்டஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலை வைத்தார்.
     
தொடர்ந்து, ராஜா மிராசுதாரர் கண் மருத்துவமனை வளாகத்தில் புதியதாக ரூபாய் 16 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூற்றாண்டு கண் மருத்துவமனை கட்டிடத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மருத்துவமனை கட்டிட கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
         
தொடர்ந்து அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பராமரிப்பு பணி நிறைவுபெற்ற குழந்தைகள் நல பிரிவினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்து குழந்தைகள் தல சிகிச்சைப் பிரிவு மற்றும் குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தாவது:
அம்மா அவர்களின் அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவ நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிக சிறப்பாக அனைத்து மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கண் மருத்துவமனை நூற்றாண்டுயொட்டி மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர்  வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதலமைச்சர் அவர்களால் ரூபாய் 16 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  நூற்றாண்டு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சிறிய நுழைவுவாயில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கெரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக கெரோனா வைரஸ் பரிசோதனை  செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 30 லட்சத்து 88 ஆயிரத்து 66 கொரோனா வைரஸ் பரிசோதனை இதுவரை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை பொருத்தவரை யாரும் விடுபடாமல் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 578 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்துவரை இதுவரை 2634 நபர்கள் கெரோனா  வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்காத வகையில் இதுவரை 3700 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 184 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தஞ்சாவூர்  மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1400 படுக்கை வசதிகளும் மாவட்டம் முழுவதும் 4000 படுக்கை வசதிகளும் தயாராக உள்ளது. தேவைப்பட்டால் படுக்கை வசதிகளை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்த திட்டம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் காய்ச்சல் என்று அறிகுறி வந்தவுடனே உடனடியாக கெரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அவ்வாறு பரிசோதனை செய்துகொண்டால் கெரோனா வைரஸ் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே எளிதாக கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே தாமாக வீட்டிலேயே சுயமருத்துவம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம் . அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நவீன மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கெரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவில் தேவைக்கேற்ப ஆக்சிசன் கையிருப்பு உள்ளது. எனவே கெரோனா வைரஸ்  கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிளாஸ்மா சிகிச்சை முறை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலமாக இதுவரை 57 நபர்கள் பயனடைந்துள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை முறையை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில்தான் அதிகளவில்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை முறையை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொரோனா பரிசோதனை முறையை மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலைமையில் கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மருந்துகள் கையிருப்பு, பரிசோதனை முறை, இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட பரிசோதனைகளின் அளவு, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் குறைகள் மற்றும் தேவைகள் குறித்தும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிக சிறப்பான முறையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசியதாவது :-
கொரோனா நோய் தடுப்பு பணியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. சேவை மனப்பான்மையுடன் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த பணியாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் செயல்பட்டுவரும் கொரோனா நோய் சிகிச்சை மையத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் தொலைபேசியில் உரையாடி அவர்கள் நலன் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, அங்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) டாக்டர் மருததுரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி, மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.