அதிரை நியூஸ்: செப்.12
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தேசிய குடற்ப்புழு நீக்க வாரம் 14.09.2020 முதல் 28.09.2020 கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்குதல் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பர் 2020 கடைப்பிடிக்க படுவதை முன்னிட்டு 1 முதல்19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி 14.09.2020 முதல் 28.09.2020 வரை மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளது.முதல் சுற்று 14.09.2020 முதல் 19.09.2020 வரையும் இரண்டாவது சுற்றாக 21.09.2020 முதல் 26.09.2020 வரையும், இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் 28.09.2020 ஆகிய தினங்களில் அரசுமற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை 200 மில்லி கிராமும் 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரை அல்பெண்டசோல் 400 மில்லி கிராம் என 6,46,186 அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் மாத்திரைகள் வழங்கப்படாது அவர் குணமடைந்தப் பின் மாத்திரை வழங்கப்படும். பள்ளி செல்லா குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு சென்று அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்முகாம் நடைபெறும் மையங்களில் கோவிட் 19 நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறைந்தபட்சம் ஆறு அடி சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் கை கழுவுதல் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் கை கழுவுவதற்கு தண்ணீர் சோப்பு போன்றவை மையங்களில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை கொடுத்து குழந்தைகளை ரத்த சோகையில் இருந்து தடுத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும்ääஅறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், பயிற்சி ஆட்சியர் அமித், மருத்துவபணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) டாக்டர்.மருததுரை, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன், அரசு மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.