.

Pages

Monday, September 28, 2020

மதுக்கூரில் முதலுதவி பயிற்சி (படங்கள்)

மதுக்கூர், செப்.28
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD ), தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் மதுக்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

நிகழ்வுக்கு, மதுக்கூர் பேரூர் தலைவர் எஸ். நூர் முகமது தலைமை வகித்தார்.துணை தலைவர் எச். இம்தியாஸ் அகமது, செயலாளர் பி. முகமது இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவரும், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே செய்யது அகமது கபீர் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்து விளக்கிப்பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் எஸ்.கார்த்திகேயன், பட்டுகோட்டை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர். செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். என்.கலையரசன், கே.ஹரிஹரசுதன் ஆகியோர் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அளிக்கும் முதலுதவி குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.

முன்னதாக. துணைச் செயலாளர் ஏ. முகமது பாசித் வரவேற்றார். துணைச்செயலாளர் ஏ. அப்துல் மாலிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவில், பொருளாளர் ஜெ. முகமது சஹிம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.