பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், அதி நவீன கருவி மூலம் காசநோய் பரிசோதனை சனிக்கிழமை தொடங்கியது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் காசநோய் பிரிவில், ரூ.12 லட்சம் மதிப்பிலான, ட்ரூ நெட் பரிசோதனை முறையில் காசநோய் கண்டறியும் நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது. இதில், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குநர் டாக்டர் முகமது கலீல், பட்டுக்கோட்டை அரசு மருதுவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனையை தொடங்கி வைத்தனர்.
இந்தக் கருவி மூலம் சாதாரண பரிசோதனைகளில் கண்டறிய முடியாத ஆரம்ப நிலை காச நோயை கண்டறிந்து உறுதி செய்யலாம். மேலும், இக்கருவி மூலம், சளி, நுரையீரல் நீர், குடல் நீர், தண்டுவட நீர் ஆகியவற்றை பரிசோதித்து சுமார் 1 மணி நேரத்தில் காச நோய் கண்டறியலாம். தனியார் மருத்துவமனைகளில், இக்கருவி மூலம் காசநோய் பரிசோதனை செய்ய, 4 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.
முன்னதாக, பாட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் பாலகுமார், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் நியூட்டன், டாக்டர் கீதா, தலைமை செவிலியர் விஜயலட்சுமி, வட்டார காசநோய் மேற்பார்வையாளர் அறிவழகன், சுகாதாரப்பிரிவு பிரகதீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.