.

Pages

Sunday, September 6, 2020

தமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா: அதிராம்பட்டினத்தில் கொடி ஏற்றம் ~ நிவாரண உதவி வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.06
தமுமுக அமைப்பின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, கொடி ஏற்றும் மற்றும் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, எம்.தமீம் அன்சாரி, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் முகமது நியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் வழக்குரைஞர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கலந்துகொண்டு, அமைப்பின் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில், அவ்வமைப்பினர் கலந்துகொண்டு, கடைத்தெரு தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம், கல்லூரி முக்கம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை, வண்டிப்பேட்டை, செக்கடி மேடு ஆகிய இடங்களில் அமைப்பின் கொடி ஏற்றி வைத்து கொள்கை முழக்கமிட்டனர். மேலும், தமுமுக 25 ஆம் ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில் சிறப்பு கல்வெட்டு பிலால் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் திறக்கப்பட்டன.

முன்னதாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அவ்வமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன்,  மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, தமுமுக துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் அஸ்லம், பீர் முகமது, வர்த்தக அணி செயலாளர் முகைதீன், தமுமுக மருத்துவ அணி செயலாளர் சகாபுதீன் மற்றும் தமுமுக, மமக அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 


 
 
 
 
               

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.