.

Pages

Monday, September 14, 2020

அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'நம்ம ஊர் கடை': அமேசான் ஸ்டோர் ஈஸி ஷாப்பிங் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்.எம்.எஸ் ஷாஃபிர் அகமது. மதுக்கூரை சேர்ந்தவர் எம். பைசல் அகமது. வளைகுடா ரிட்ர்ன் நண்பர்களான இருவரும், அதிராம்பட்டினம், வண்டிப்பேட்டை பெட்ரோல் நிலையம் அருகில் 'நம்ம ஊர் கடை' அமேசான் ஸ்டோர் ஈஸி ஷாப்பிங்! எனும் புதிய தொழில் நிறுவனத்தை இன்று திங்கள்கிழமை காலை தொடங்கி உள்ளனர்.

திறப்பு விழாவில் ஊர் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர்கள் என்.எம்.எஸ் ஷாஃபிர் அகமது, எம். பைசல் அகமது ஆகியோர் கூறியது;
அதிராம்பட்டினத்தில் முதன்முறையாக இந்த நிறுவனத்தை  தொடங்கி இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் தொலை தூரங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கிவர வேண்டிய அவசியமிருக்காது. வீண் அலைச்சல், நேரம், செலவளிக்கும் பணம் மிச்சமாகும். 'அமேசான் ஸ்டோர்' ஈஸி ஷாப்பிங்கில் 11 கோடிக்கும் அதிகமானப் பொருட்கள் ஒரே இடத்தில் பெரும் வசதி உள்ளது. 

100 சதவீத தரமான பொருட்கள் விநியோகம், பெரிய உபகரணங்கள், சிறிய உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல், எலெக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள், எளிதான தவணை, இலவச டெலிவரி ஆகிய வசதிகள் உண்டு.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது தொழில் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றனர்.
நிறுவனத் தொடர்புக்கு:
98949 50050
88388 00801

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.