பட்டுக்கோட்டை, செப்.09
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் முகமது தலைமையில், சங்க நிர்வாகிகள் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு புதிய சார் ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள எஸ்.பாலசந்தரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சார்பில், பட்டுக்கோட்டை ஒன்றிய பேரவைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளிகளின் மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, மாவட்டச் செயலாளர் இளங்கோவன்,பேராவூரணி ஒன்றிய தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் சுதாகரன், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பேரவை கூட்டத்தில் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவராக ஆனந்தகிருஷ்ணன், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக கோட்டை துறை, ஒன்றிய துணைத் தலைவராக பாலு, துணைச் செயலாளராக கோபி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்:
மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய மாத உதவித்தொகை தடையில்லாமல் கிடைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது.
மாற்றுத் திறனாளிகள் அரசின் உத்தரவுப்படி ஊராட்சிகளில் 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம் என்று இருந்தும் மாற்றுத்திறனாளிகளை வேலையில் சேர்க்காமல் இருப்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயமாக கைப்பிடியுடன் கூடிய சாவி தளம் தனியார்துறை அரசுத்துறை அனைத்திலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் ஒன்றியத்தலைவர் ராவுத்தர் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் முகமது தலைமையில், சங்க நிர்வாகிகள் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு புதிய சார் ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள எஸ்.பாலசந்தரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் முகமது தலைமையில், சங்க நிர்வாகிகள் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு புதிய சார் ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள எஸ்.பாலசந்தரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சார்பில், பட்டுக்கோட்டை ஒன்றிய பேரவைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளிகளின் மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, மாவட்டச் செயலாளர் இளங்கோவன்,பேராவூரணி ஒன்றிய தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் சுதாகரன், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பேரவை கூட்டத்தில் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவராக ஆனந்தகிருஷ்ணன், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக கோட்டை துறை, ஒன்றிய துணைத் தலைவராக பாலு, துணைச் செயலாளராக கோபி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்:
மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய மாத உதவித்தொகை தடையில்லாமல் கிடைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது.
மாற்றுத் திறனாளிகள் அரசின் உத்தரவுப்படி ஊராட்சிகளில் 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம் என்று இருந்தும் மாற்றுத்திறனாளிகளை வேலையில் சேர்க்காமல் இருப்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயமாக கைப்பிடியுடன் கூடிய சாவி தளம் தனியார்துறை அரசுத்துறை அனைத்திலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் ஒன்றியத்தலைவர் ராவுத்தர் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் முகமது தலைமையில், சங்க நிர்வாகிகள் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு புதிய சார் ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள எஸ்.பாலசந்தரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.