.

Pages

Wednesday, September 2, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா அல்லாத புற, உள் நோயாளிகளுக்கு சிகிச்சை!

அதிரை நியூஸ்: செப்.02
தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா அல்லாத புற, உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் 01.09.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர்சஞ்சய் உடன் இருந்தார்.

இவ்வாய்வின்போது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் பிளாஸ்மா கொடை தானம் வழங்கிய செந்தில் என்ற கொடையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, இதுபோன்று கொரோனா தொற்று முற்றிலும் குணமடைந்த நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்கி நோய்த்தொற்று ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு உதவ முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இம்மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று ஏற்பட்ட இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகள் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார்கள். பிளாஸ்மா தானம் ஒருவர் அளிப்பதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படும் இரு நபர்களுக்கு இந்த பிளாஸ்மா மூலம் சிகிச்சை மேற்கொள்ள முடியும். பிளாஸ்மா தானம் கொடையாளர்கள் 28 நாட்கள் இடைவெளிவிட்டு பிளாஸ்மா தானம் அளிக்கலாம் அதிகப்பட்சமாக இரண்டு முறை மட்டுமே தானம் அளிக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து நுண் கதிர் நோய்யியல் முறை செயல்பாடு குறித்து நேரடியாக பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நுண்கதிர் இடையூறு சிகிச்சை கருவி செயல்பாடு குறித்தும், இதர கருவிகளின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார்

தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புணர்மைக்கப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் அருகே உள்ள சாலையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டாரகள். வார்டு 16-இல் நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டு படுக்கை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த கொரோனா அல்லாத வெளி நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ள நோயாளிகள் புற நோயாளிகள் மற்றும் கொரோனா அல்லாத உள் நோயாளிகளிடம் அரசு மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சை சிறப்பாக பயனுள்ளதாக அமைந்துள்ளது என கேட்டிருந்தார்கள்.

தற்பொழுது பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளாதல், இனிவரும் நாட்களில் அதிகமான புறநோயாளிகள் மருத்துவமனைக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இங்குள்ள உள் நோயாளிகள், புற நோயாளிகள், சிகிச்சை மேற்கொள்ள தனி பாதைகள் அமைப்பது, தனி சிகிச்சை பிரிவு ஏற்ப்படுத்துதல் தொடர்பாகவும் கொரோனா நோயாளிகளை தனி வார்டு பகுதிக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார்கள்
பின்னர் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய ஆட்சியர் அவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து தரும் எனவும் உறுதியளித்து இந்த கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பு அல்லாத மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு, அறுவை அரங்கம் ஆகிய பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் வரை 1200 சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 சிறுநீரக நோயாளிகளுக்கு 86 முறை ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. பொது அறுவை சிகிச்சை பிரிவு மூலமாக 120 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகப்பேறு மருத்துவ துறை சார்பில் 1126 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது. அதில் 564 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா நோய்த்தொற்று பாதித்த 85 தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. குருதி நாளம் அறுவை சிகிச்சை துறை மூலம் 52 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வின் போது திருவாரூர் நாராயணசாமி என்பவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி முறையில் குருதி நாளம் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்வையிட்டனர். ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5750 பாம்புக்கடி மருந்து குப்பிகள் பயன்படுத்தப்பட்டு 267 பாம்புக்கடி சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 259 நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம், விபத்து காயம், தலை காயம், எலும்பு முறிவு, விஷ முறிவு ஆகியவற்றிற்கு எவ்வித தொய்வும் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் கொரோனா வார்டு எது, பொது வார்டு எது என்பதை அறிந்து சிகிச்சை எடுக்க செல்ல வேண்டும் எனவும், மேலும் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்த்திட வேண்டும் எனவும் ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மா. கோவிந்த ராவ் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.அரவிந்தன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மருததுரை தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன் மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.